
புது தில்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2வது விமானத்தை வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், புதிய பாகிஸ்தான் உருவாகிவிட்டதாகக் கூறும் இம்ரான் கான் பயங்கரவாதிகள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2வது விமானத்தை வீழ்த்திவிட்டதாகக் கூறும் பாகிஸ்தான், விமானத்தை வீழ்த்தியதற்கான ஆதாரத்தை சர்வதேச ஊடகங்களில் ஏன் வெளியிடவில்லை? 2வது விமானத்தை வீழ்த்தியது உண்மை என்றால் ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.