பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மாயாவதியுடன் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகர் அமைத்த தேர்தல் கூட்டணி   

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகர் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளார்.

Published On :

ஹைதராபாத்: நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகர் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளார்.

ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகரான பவன் கல்யாண், ஜனசேனா என்னும் கட்சியையும் நடத்தி வருகிறார். அவர் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலிலும் கவனம் செலுத்துகிறது. இதற்கான கூட்டணி அறிவிப்பு லக்னௌவில் வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு மாயாவதி பேசும் போது கூறியதாவது:

ஆந்திர மாநில மக்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும், மாநில சட்டசபைத் தேர்தலிலும் மாற்றத்தை விரும்புகிறார்கள். புதியவர்கள் அரசாள வரவேண்டும் என்பதே  மக்களின் ஆர்வமாக உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஜனசேனா மற்றும் பிற பிராந்திய கட்சிகளுடன் நாங்களும் இணைந்து போட்டியிடுகிறோம் ஆந்திர மாநில முதல்வராக பவன் கல்யாண் வர வேண்டும்

இதற்கு பதிலளித்து பவன் கல்யாண் பேசும்போது, 'நீங்கள் இந்தியாவின் பிரதமராக வேண்டும்' என்று மாயாவதியிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.