மக்களவைத் தேர்தல்: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் இடையே கூட்டணி

17-ஆவது மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


17-ஆவது மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த அறிவிப்பை
காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இன்று வெளியிட்டனர். 

அதன்படி, ஸ்ரீநகர் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா போட்டியிடுகிறார். ஜம்மு மற்றும் உதாம்பூர் தொகுதியில் காங்கிரஸ்
போட்டியிடுகிறது. 

அனந்த்நாக் மற்றும் பாராமுல்லா தொகுதியில் இரண்டு கட்சிகளுமே வேட்பாளர்களை நிறுத்துகிறது. இந்த 2 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு இடையே நட்பு ரீதியான போட்டி என்று தெரிவித்தனர்.

மேலும், லடாக் தொகுதி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com