‘மிஷன் சக்தி’ தொடர்பான மோடியின் அறிவிப்பு தேர்தல் விதிமீறலா?: ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு 

‘மிஷன் சக்தி’ திட்டத்தின் வெற்றி தொடர்பாக புதனன்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு  தேர்தல் விதிமீறலா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
‘மிஷன் சக்தி’ தொடர்பான மோடியின் அறிவிப்பு தேர்தல் விதிமீறலா?: ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு 
Published on
Updated on
1 min read

புது தில்லி: ‘மிஷன் சக்தி’ திட்டத்தின் வெற்றி தொடர்பாக புதனன்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு  தேர்தல் விதிமீறலா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

300 கிமீ தொலைவில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் உள்ள விண்ணில் உள்ள செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தி இருப்பதை பிரதமர் மோடி புதனன்று அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பை முன்வைத்து விஞ்ஞானிகளின்  சாதனைகள் மூலம் பிரதமர் மோடி ஆதாயம் தேடக்கூடாது என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த அறிவிப்பு தேர்தல் விதிமீறல் என்று சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆணையத்தில் புகார் செய்துள்ளார். 

இந்நிலையில் ‘மிஷன் சக்தி’ திட்டத்தின் வெற்றி தொடர்பாக புதனன்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு  தேர்தல் விதிமீறலா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. அதில் எடுக்கப்பட்ட தேச பாதுகாப்பு தொடர்பான முடிவுகளோ மற்றும் பேரிடர் நிர்வாகம் தொடர்பான விஷயங்களோ தேர்தல் நடத்தை விதிமுறை வரம்புக்குள் வராது; எனவே அதற்கு முன்அனுமதி பெறத் தேவையில்லை என்ற பாஜக வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com