புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

'எல்லா மோடிகளும் திருடர்கள்' என்ற சர்ச்சைப் பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜராக ராகுல் காந்திக்கு அழைப்பாணை  

'எல்லா மோடிகளும் திருடர்கள்' என்ற சர்ச்சைப் பேச்சின் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மே 2019, 2:36 pm

DIN

சூரத்: 'எல்லா மோடிகளும் திருடர்கள்' என்ற சர்ச்சைப் பேச்சின் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 13-ஆம் தேதி கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,   'ஏன் மோடி என்று பெயர் கொண்டவர்கள் உள்ளவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள்?' என்று பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

இந்நிலையில் சர்ச்சைப் பேச்சின் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

சூரத் மேற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏவான புர்னேஷ் மோடி என்பவர் கடந்த மாதம் 16-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  அவர் தனது புகாரில் தனது பேச்சின் மூலமாக ஒட்டுமொத்தமாக மோடி இனத்தையே ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் சூரத் தலைமை ஜூடிசியல் நீதிபதி கபாடியா, நீதிமன்றத்தில் ஜூன் 7-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.