அவர் இது குறித்துப் பேசுகையில், 2002ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் வேதனை அடைந்த அடல் பிஹாரி வாஜ்பாயி, மாநில முதல்வர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைக்க விரும்பினார். இது குறித்து 2002ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் போது, அடல் பிஹாரி வாஜ்பாயி தனது மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசினார். மோடி முதல்வர் பதவியில் இருந்து விலக மறுப்பு தெரிவித்தால், குஜராத்தில் ஆட்சியையே கலைத்து விடுவது என்று முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.