மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரக்யா தாகூர் 100 சதவீத ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிரக்யா தாகூர் 100 சதவீத ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி. அதுபோன்ற ஒரு பெண்ணிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். இவரைப் போன்ற பலபேர் பாஜக-வில் உள்ளனர். இதுபோன்றவர்களை நாம் எவ்வாறு தேச பக்தர்களாகக் கருதுவது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

‘விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பேரூா் பட்டீசுவரா் கோயில் நகை மோசடி: எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


