மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாராஷ்டிராவில் லாரியின் டயர் வெடித்து விபத்து: 13 பேர் பரிதாப பலி 

மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலையில் லாரி ஒன்றின் டயர் வெடித்து, அது டெம்போ மீது விழுந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

News image
Updated On :20 மே 2019, 4:02 pm

நாக்பூர்: மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலையில் லாரி ஒன்றின் டயர் வெடித்து, அது டெம்போ மீது விழுந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

மகாராஷ்டிராவின் கட்ச் நகரில் இருந்து நாக்பூர் நோக்கி உப்பு ஏற்றப்பட்ட சரக்கு லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலை 6ல் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியானது மல்காபூர் என்னும் பகுதியில் வந்துகொண்டிருந்த போது திடீரென அதன் டயர் வெடித்தது. இதனை அடுத்து அந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து ஓடத்தொடங்கியது.

இதனால் அதிவேகமாக அருகில் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்றின் மீது அந்த லாரி விழுந்தது.  இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  அவர்களில் 5 பேர் பெண்கள்.  3 பேர் குழந்தைகள் ஆவார்கள். மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்து உள்ளனர். 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடனடியாக   காயமடைந்த நபர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.