நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தோற்றவர்கள் எல்லாம் தோல்வியாளர்கள் அல்ல: மம்தா பானர்ஜி

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

News image
Updated On :23 மே 2019, 9:02 am

PTI


கொல்கத்தா: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

அதே சமயம், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மம்தா பானர்ஜி கூறுகையில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி முடிக்கும் வரை காத்திருப்போம். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் தோல்வியடைந்தவர்கள் யாரும் தோல்வியாளர்கள் அல்ல என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மதியம் 2 மணி நிலவரப்படி, மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதியிலும், பாஜக 19 தொகுதியிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.