சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை: எம்எல்ஏ கொலையில் தொடர்புடையவர்

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி உள்பட 5 பேர்

Updated On :27 மே 2019, 2:43 am IST

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் ஆவார்.
இதுதொடர்பாக தண்டேவாடா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா கூறியதாவது:
ஹிரோலி வனப் பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பின்னர், நக்ஸல்கள் தப்பியோடிவிட்டனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், குட்டி என்ற நக்ஸல் தீவிரவாதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 
தண்டேவாடா மாவட்டத்தின் ஷியாம்கிரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நக்ஸல்கள் நடத்திய குண்டுவெடிப்பில் பாஜக எம்எல்ஏ பீமா மண்டவியும், அவரது பாதுகாவலர்கள் நால்வரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உள்பட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் குட்டிக்கு தொடர்புள்ளது. ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து, இவர் தேடப்பட்டு வந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றார் அபிஷேக் பல்லவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.