ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தாஜ்மஹால் நகரில் காற்று மாசுபாடு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.6.84 கோடி அபராதம்!

ஆக்ரா நகரில் காற்றை மாசுபடுத்தியதற்காக உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது. 

News image
Updated On :4 நவம்பர் 2019, 5:37 am

புகழ்பெற்ற தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரில் காற்றை மாசுபடுத்தியதற்காக உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது. 

தில்லியில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதை அடுத்து, அங்கு பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தில்லியில் சில தினங்களாக புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க கட்டுமானப்பணிகள் நிறுத்தம், வாகனக் கட்டுப்பாடு என அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

Story image

இந்த நிலையில், உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தாஜ்மஹால் உள்ள ஆக்ரா நகரமும் காற்று மாசுபாட்டுக்கு ஆளாகியுள்ளது. காற்று மாசுபாட்டினால் தாஜ்மஹாலின் முகப்பிலும் புகை சூழ்ந்துள்ளது. இதையடுத்து ஆக்ரா நகரில் காற்றை மாசுபடுத்தியதற்காக உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது. 

நகரைச் சுற்றியுள்ள கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தவும், ஆக்ரா நகரில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தண்ணீரைப் பாய்ச்சுதல் உள்ளிட்ட துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதை மீறியும், கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிட்டால், கட்டுமானக் கழிவை அப்புறப்படுத்தும் விதிகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.