"ராம் லல்லா பகுதி தற்போது சர்ச்சைக்குரிய இடம் அல்ல என்பது தெளிவாகிவிட்டது. அதேசமயம், அங்கு எழுப்பப்பட்ட விதானமும் கோயிலுடையது என்பதும், அது பாபர் மசூதியைச் சேர்ந்தது அல்ல என்பதும் தெளிவாகியுள்ளது. எனவே, பாபர் மசூதியை இடித்ததற்காக போடப்பட்ட கிரிமினல் வழக்குகள் என்பது, ராமரை வழிபடுபவர்கள் தவறுதலாக கோயிலின் விதானத்தை இடித்த செயலுக்கானதாகும். அவர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெற்று, இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.