மறைந்த அருண் ஜேட்லி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே எழும் அரசியல் பிரச்னைகள் தொடர்பான கசப்பான அனுபவங்கள் கூட எங்களுடைய நட்பால் இனிப்பாக மாறிவிடும். மாணவர் பருவம் முதல் மறையும் வரை அருண் ஜேட்லி மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டவர். நல்ல மாணவராகவும், சிறந்த பேச்சாளராகவும், தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகவும் அருண் ஜேட்லி திகழ்ந்தார். அவரைப் போன்றவருடைய மறைவு, ஜேட்லி சார்ந்த பாஜக கட்சிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஏற்பட்ட இழப்பாகும். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்றார்.