கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை சந்திப்பாரா? - சஞ்சய் ராவத் பதில்!

விவசாயிகளின் நலனுக்காக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை மட்டுமல்ல, யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் என்று  சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

News image
SANJAY RAUT SHIV SENA
Updated On :31 ஜனவரி 2024, 1:12 pm

IANS

மகாராஷ்டிர விவசாயிகளின் நலனுக்காக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை மட்டுமல்ல, யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் என்று  சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த பாஜக - சிவசேனை கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாததாலும், அதன்பின்னர் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததாலும், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியுடன் சோ்ந்து கூட்டணி அரசு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள்  இதில் கலந்துகொள்ள உள்ளனர். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனை உள்ளிட்ட மூன்று கட்சிகளும் கூட்டணி அமைக்குமா என இன்று தெரியவர வாய்ப்புள்ளது. 

இதுகுறித்து சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என்றும் டிசம்பர் முதல் வாரத்தில் சிவசேனை தலைமையில் ஆட்சி அமையும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், 'தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருக்கிறது. எனவே, விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். சிவசேனை ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்தான் எங்களது எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வார்கள்' என்று கூறினார். 

தொடர்ந்து, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத்,  மக்களின் நலன் கருதி, முக்கியமாக விவசாயிகளின் நலனுக்காக உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடி அல்ல, யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.