புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 99 நாட்களாக சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மகாராஷ்டிர அரசியல் குறித்து பேசியிருக்கிறார்கள்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கடந்த 99 நாட்களாக திகார் சிறையில் இருக்கிறார்.
நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட ப. சிதம்பரம், வெளியே வந்த போது கூறியதாவது, மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் நாடகங்கள் அனைத்துக்கும் மாநில ஆளுநர், பிரதமர், குடியரசுத் தலைவர்தான் பொறுப்பு.
மகாராஷ்டிர அரசியலில் பாஜக கண்ட தோல்விதான் அரசியல் சாசன தினத்தில் கிடைத்த பெரிய மரியாதை.
நள்ளிரவில் நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் மகாராஷ்டிர ஆளுநர், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகிய அனைவரும்தான் பொறுப்பு.
அதிகாலை 4 மணிக்கெல்லாம் குடியரசுத் தலைவரை எழுப்பியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் போது சிதம்பரம் கூறிக் கொண்டே வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


