ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மகாராஷ்டிர அரசியல் குறித்து 99 நாட்களாக சிறையில் இருக்கும் சிதம்பரம் சொன்னது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 99 நாட்களாக சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மகாராஷ்டிர அரசியல் குறித்து பேசியிருக்கிறார்கள்.

News image

மகாராஷ்டிர அரசியல் குறித்து சிதம்பரம் கருத்து

Updated On :27 நவம்பர் 2019, 12:23 pm


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 99 நாட்களாக சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மகாராஷ்டிர அரசியல் குறித்து பேசியிருக்கிறார்கள்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கடந்த 99 நாட்களாக திகார் சிறையில் இருக்கிறார்.

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட ப. சிதம்பரம், வெளியே வந்த போது கூறியதாவது, மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் நாடகங்கள் அனைத்துக்கும் மாநில ஆளுநர், பிரதமர், குடியரசுத் தலைவர்தான் பொறுப்பு.

மகாராஷ்டிர அரசியலில் பாஜக கண்ட தோல்விதான் அரசியல் சாசன தினத்தில் கிடைத்த பெரிய மரியாதை.  

நள்ளிரவில் நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் மகாராஷ்டிர ஆளுநர், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகிய அனைவரும்தான் பொறுப்பு.

அதிகாலை 4 மணிக்கெல்லாம் குடியரசுத் தலைவரை எழுப்பியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் போது சிதம்பரம் கூறிக் கொண்டே வந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.