நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எந்த பிரச்னைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வு தருகின்றன: சபர்மதி ஆசிரமத்தில் மோடி பேச்சு 

எந்த பிரச்னைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வு தருகின்றன என்று குஜராத்  சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

News image

பிரதமர் மோடி (கோப்புப்படம்)

Updated On :2 அக்டோபர் 2019, 4:11 pm

DIN

சபர்மதி: எந்த பிரச்னைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வு தருகின்றன என்று குஜராத்  சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் புதனன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தில்லியில் காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலையில் குஜராத் மாநிலம் சபர்மதியில் உள்ள காந்தியின் ஆசிரமத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.  பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியின் பேசிய அவர், உலகில் உள்ள எந்த பிரச்னைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வு தருகின்றன. உலகளவில் நிகழும் பல சாதகமான மாற்றங்களில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.