வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பிரதமர் மோடியின் தாயாரை சந்தித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியை குஜராத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

News image
Updated On :13 அக்டோபர் 2019, 9:58 am

DIN

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியை குஜராத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாட்கள் பயணமாக குஜராத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், இன்று குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிரதமர் மோடியின் தயாரான ஹீராபென் மோடியை நேரில் சந்தித்து பேசினார். ஜனாதிபதியின் மனைவி சவிதாவும் அவருடன் சென்றிருந்தார். இருவரும் மோடியின் தாயாருடன் சுமார் அரை மணி நேரம் செலவிட்டனர். அப்போது ஜனாதிபதியும், அவரது மனைவியும் மோடியின் தாயாரிடம் ஆசி பெற்றதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, ஜனாதிபதியும், அவரது மனைவியும்  கோபாவிற்கு அருகே அமைந்துள்ள மகாவீர் ஜெயின் ஆரதான மையத்திற்குச் சென்றனர். அங்கு   ஆச்சார்யா ஸ்ரீ பத்ம சாகர் சூரிஜியிடம் ஆசீர்வாதம் பெற்றனர். தொடர்ச்சியாக, ஜனாதிபதி இன்று மாலை டெல்லி திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.