சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மகாராஷ்டிரம், ஹரியாணா பேரவைத் தேர்தல்: மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 51 பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:27 am

DIN

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

Story image

அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 51 பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. 

Story image

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்துச் செல்கின்றனர்.

Story image

மாகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது வாக்கை பதிவு செய்தார். ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் கர்னலில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். 

Story image

பாந்த்ரா,  பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் தங்கள் வாக்கைச் செலுத்தி வருகின்றனர்.

Story image

மும்பையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

Story image

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அவரது மனைவி காஞ்சன், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் அவரது மனைவி வாக்களித்தனர்.

Story image

அதுமட்டுமல்லாமல் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, மாதுரி தீட்சித், லாரா தத்தா மற்றும் அவரது கணவரும் பிரபல டென்னிஸ் வீரருமான மகேஷ் பூபதி, ஜெனிலியா மற்றும் அவரது கணவரும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

Story image

இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 45 சதவீதம் மற்றும் ஹரியாணாவில் 55  சதவீதம் வாக்குப் பதிவாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.