சிக்கிம் இடைத்தேர்தல்: முதல்வர் வெற்றி; இரண்டு தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக!
ஹரியாணா, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநிலத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த மூன்று தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கையில் பாஜக இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
போக்லாக்- கம்ராங் தொகுதியில் சிக்கிம் முதல்வரும், சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியின் வேட்பாளருமான பிரேம் சிங் தமாங் வெற்றி பெற்றுள்ளார். இவர் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளர் மோசஸ் ராயை விட 8,953 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மார்டம்- ரும்டெக் தொகுதியில் பாஜக வேட்பாளர் சோனம் ஷ் வென்சுங்பா 6,150 வாக்குகள் வித்தியாசத்திலும், கேங்டாக் தொகுதியில் பாஜக வேட்பாளர் யங் ஷேரிங் லெப்ச்சா 1,010 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தமுள்ள 3 தொகுதியில் பாஜக 2 தொகுதியையும், சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.