குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை விக்ரம்: லேண்டருக்கு ஒரு வேடிக்கை வேண்டுகோள் 

உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை விக்ரம் என்று நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டர் விக்ரமிற்கு ஒரு வேடிக்கை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News image

நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர்

Updated On :9 செப்டம்பர் 2019, 5:56 pm IST

நாக்பூர்: உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை விக்ரம் என்று நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டர் விக்ரமிற்கு ஒரு வேடிக்கை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத் திட்டம் இறுதி நேரத்தில் பின்னடைவை சந்தித்துது.

விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், சனிக்கிழமை அதிகாலை தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது

அதைத்தொடர்ந்து பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ சனிக்கிழமை மாலை உறுதிபடத் தெரிவித்தது.

இதில் திடீர் திருப்பமாக  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், அதனுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது என்று ஞாயிறு மதியம் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இந்நிலையில் உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை விக்ரம் என்று நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டர் விக்ரமிற்கு ஒரு வேடிக்கை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாக்பூர் நகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து திங்கள் மதியம் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

அன்புள்ள விக்ரம், தயவு செய்து பதிலளிக்கவும். சிக்னலை முறித்துக் கொண்டதற்காக உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை.  

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள் விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த நடக்கும் முயற்சிக்காக, நாக்பூர் நகர காவல்துறை இவ்வாறு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.