‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை விக்ரம்: லேண்டருக்கு ஒரு வேடிக்கை வேண்டுகோள் 

உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை விக்ரம் என்று நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டர் விக்ரமிற்கு ஒரு வேடிக்கை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர்

Published On :31 ஜனவரி 2024, 3:32 pm IST

நாக்பூர்: உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை விக்ரம் என்று நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டர் விக்ரமிற்கு ஒரு வேடிக்கை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத் திட்டம் இறுதி நேரத்தில் பின்னடைவை சந்தித்துது.

விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், சனிக்கிழமை அதிகாலை தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது

அதைத்தொடர்ந்து பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ சனிக்கிழமை மாலை உறுதிபடத் தெரிவித்தது.

இதில் திடீர் திருப்பமாக  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், அதனுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது என்று ஞாயிறு மதியம் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இந்நிலையில் உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை விக்ரம் என்று நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டர் விக்ரமிற்கு ஒரு வேடிக்கை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாக்பூர் நகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து திங்கள் மதியம் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

அன்புள்ள விக்ரம், தயவு செய்து பதிலளிக்கவும். சிக்னலை முறித்துக் கொண்டதற்காக உனக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போவதில்லை.  

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள் விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த நடக்கும் முயற்சிக்காக, நாக்பூர் நகர காவல்துறை இவ்வாறு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.