செல்போனில் பேசிக் கொண்டே கட்டிலில் அமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! 

சமீப காலமாக வண்டி ஓட்டுவது முதல் சமையல் செய்வது வரை செல்போன் பேசிக் கொண்டே வேலை செய்வதும் ஒரு கலையாகிவிட்டது.
செல்போனில் பேசிக் கொண்டே கட்டிலில் அமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! 
Published on
Updated on
1 min read


சமீப காலமாக வண்டி ஓட்டுவது முதல் சமையல் செய்வது வரை செல்போன் பேசிக் கொண்டே வேலை செய்வதும் ஒரு கலையாகிவிட்டது.

ஆயக் கலை அறுபத்து நான்கும் தெரியுமோ தெரியாதோ, நிச்சயம் பலருக்கும் இந்தக் கலை நன்றாகவே தெரிந்திருக்கிறது. சரி அது இப்போது பிரச்னையில்லை. 

உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூரில் கட்டிலில் படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த பாம்புகளை கவனிக்காமல், செல்போனில் பேசியபடி கட்டிலில் அமர்ந்த பெண்ணை பாம்புகள் கடித்ததில், அவர் மரணத்தைத் தழுவினார்.

கோராக்பூரின் ரியான்வ் கிராமத்தில் நேற்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தாய்லாந்தில் பணியாற்றி வரும் ஜெய் சிங் யாதவின் மனைவி கீதா. தனது கணவருடன் செல்போனில் பல மணி நேரமாகப் பேசிக் கொண்டிருந்தார் கீதா. அப்போது அவருக்குத் தெரியாமல் இரண்டு பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்து கட்டிலில் ஏறிவிட்டன.

அப்போதும் கீதா செல்போனில் பேசியபடி, அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்துதான் தாமதம், அவருக்காகவே காத்திருந்தது போல, இரண்டு பாம்புகளும் கீதாவைக் கொத்தின. நினைவின்றி கட்டிலில் சரிந்த கீதாவை, உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போதும் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது உறவினர்களுக்குப் புரியவில்லை.

கீதாவின் உடலை வீட்டுக்குக் கொண்டு வந்த போதும், அதே கட்டிலில் இரண்டு பாம்புகளும் அப்படியே இருந்துள்ளன. அதைப் பார்த்துதான் என்ன நடந்தது என்பதை உறவினர்கள் அறிந்து கொண்டனர்.

ஆத்திரத்தில் இருந்த கீதாவின் உறவினர்கள் பாம்புகளை அடித்துக் கொன்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com