

புது தில்லி: அமலாக்கத்துறையில் தானாக சரணடைய முன் வந்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதையடுத்து, வரும் 19-ஆம் தேதி வரை தில்லி திகார் சிறையில் அவரை அடைக்க தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இதனிடையே அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையிடம் தானாக சரணடைய முன் வந்து சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.