புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

புதிய வாகனச் சட்டம்: 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க ஜார்கண்ட் அரசு முடிவு

புதிய வாகனச் சட்டத்துக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக ஜார்கண்ட் அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 

News image
ஜார்கண்ட் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி.சிங் | கோப்புப் படம்
Updated On :16 செப்டம்பர் 2019, 5:52 am

DIN

புதிய வாகனச் சட்டத்துக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக ஜார்கண்ட் அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி.சிங் கூறுகையில்,

மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து தான் புதிய வாகனச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இதில் மக்கள் சில இடையூறுகளுக்கு உள்ளாகின்றனர்.

எனவே அனைவரும் தங்களின் ஆவணங்களை சரிசெய்து கொள்ள போதிய கால அவகாசம் அளிக்கும் வகையில், இந்த புதிய சட்டத்தில் இருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில் மக்களும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.