மோடி அரசு எப்போதுமே யாரையும் திருப்திப்படுத்துவதற்காக முடிவுகளை எடுப்பதில்லை. மாறாக, மக்களின் நல்வாழ்வுக்காகவே முடிவுகளை எடுக்கிறது. இந்தியாவில் நல்லாட்சி நடைபெறும் காரணத்தாலேயே எட்டு நாடுகள் தங்கள் நாட்டின் மிக உயரிய விருதை பிரதமருக்கு வழங்கியுள்ளன.
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளைப் பொறுத்தவரை , சில ஆரம்பப் பிரச்னைகள் இருக்கலாம். அவை விரைவில் முடிந்து விடும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு விவகாரத்திலும் சில பிரச்னைகள் இருந்தன. எனினும், அதைத் தாண்டி ஒரு மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி வசூல் என்பதை நம்மால் பல முறை வசூலிக்க முடிந்தது. ஆரம்பத்தில் சில சிரமங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் சீர்திருத்தங்கள் ஒட்டுமொத்தமாக நன்மை பயக்கும்.
சாலை அமைப்பு, புதிய ரயில் பாதைகள் அமைப்பு, இலவச எரிவாயு இணைப்பு, மின்சார வசதி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. வரும் 2022ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு, எரிவாயு இணைப்பு, கழிப்பறை வசதி, மின்சார இணைப்பு, வங்கிக் கணக்கு ஆகியவை இருக்கும். மக்களுக்கு கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை நாங்கள் வழங்குகிறோம்.