கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்!

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிஸ்தா முகர்ஜி, ஆளும் பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:11 am

IANS

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிஸ்தா முகர்ஜி, ஆளும் பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். 

தில்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், "நாட்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. 

மேலும், கலால் வரியை உயர்த்தி பெட்ரோல் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. கலால் வரி மட்டுமே, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.20 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.15 இருந்து வருகிறது.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் 8% பேர். அதாவது, 8 கோடி மக்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். 

பொருளாதார மந்த நிலை காரணமாக நாட்டில் ஆட்டோ மொபைல் துறை சரிவடைந்துள்ளது. ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் பல மூடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

விவசாயத்திலும் இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது. நாட்டில் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தில்லியில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 4,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது.  பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இங்கு அரங்கேறுகின்றன. 

இதுபோன்று நாட்டில் நிலவும் மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் உரிய பதில் அளிக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.