பிகார், இமாச்சல் மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

பிகார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை எச்சரித்துள்ளது.
பிகார், இமாச்சல் மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
Published on
Updated on
1 min read

புது தில்லி: பிகார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை எச்சரித்துள்ளது.

கிழக்கு உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் இன்று நாள் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை முன்னறிவிப்பு கணித்துள்ளது.

"மேற்கு வங்கம், ஒடிசா, குஜராத், மத்திய மகாராஷ்டிரா, கொங்கன், கோவா, வட கடலோர ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மாகே மற்றும் லட்சத்தீவில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அகில இந்திய வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தெற்கு குஜராத் கடற்கரையில் மோசமான வானிலை நிலவும். அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com