பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாரமுல்லாவில் பாதுகாப்புப் படை வாகனத்துக்கு மர்ம கும்பல் தீ வைப்பு

பாரமுல்லா மாவட்டத்தில் பட்டன் பகுதிக்கு அருகே எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) வாகனத்தை மர்ம கும்பல் வியாழக்கிழமை தீ வைத்து எரித்தது. 

News image

கோப்புப் படம்

Updated On :27 செப்டம்பர் 2019, 7:57 am

பாரமுல்லா மாவட்டத்தில் பட்டன் பகுதிக்கு அருகே எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) வாகனத்தை மர்ம கும்பல் வியாழக்கிழமை தீ வைத்து எரித்தது. இதுகுறித்து பி.எஸ்.எஃப் அதிகாரிகள் கூறியதாவது, 

பாரமுல்லா-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து டன் எடை கொண்ட 2 கனரக பிஎஸ்எஃப் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன, அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த கார் ஓட்டுநர், பி.எஸ்.எஃப் வீரர்களுடன் வாய் தகராறில் ஈடுபட்டார். அப்போது உள்ளூர் மக்களும் அதிகளவில் திரண்டனர்.

அப்போது பி.எஸ்.எஃப் வாகனம் ஓட்டுநர் வேண்டுமென்றே வேகமாக ஓட்டியதாகக் கூறி அங்கிருந்த மர்ம கும்பல் அந்த வாகனத்தை தீயிட்டு எரித்தனர். இச்செயல் காரணமாக பி.எஸ்.எஃப் வாகனத்தின் ஓட்டுநர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.