நொய்டாவில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்த காவலர்களுக்கு இன்று காலை வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் நமோ உணவு என்று பதிவிடப்பட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஆனால் நமோ ஃபுட்ஸ் என்ற கடையில் இருந்தே இந்த உணவுப் பொட்டலங்கள் வாங்கப்பட்டதாகவும், இது எந்த அரசியல் கட்சியினராலும் வழங்கப்பட்டது அல்ல என்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தேர்தல் பணியில் இருந்த காவலர்களுக்கு 9 மணிக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அந்த உணவுப் பொட்டலங்களின் மீது நமோ உணவு என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்த செய்தியாளர்களும், பொதுமக்களும் அதனை வலைத்தளத்தில் பகிர சர்ச்சை உருவானது.
அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த உணவினை வழங்கியதாக தவறான தகவல்கள் பரபரப்பட்டு வருகிறது. இது மிகவும் தவறு. அருகில் இருக்கும் நமோ ஃபுட்ஸ் என்ற கடையில் இருந்துதான் உணவு வாங்கப்பட்டதேத் தவிர, எந்த அரசியல் கட்சியும் கொடுக்கவில்லை என்று காவல்துறை உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சௌதியின் ஜிசான் நகரத்தின் மீது ஹௌதிகள் தாக்குதல்!

ஷ்யாம் சுந்தர் சதம் விளாசல்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு!

சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!

ரக்ஷன் நாயகனாக நடிக்கும் மேரி கோல்ட்! படப்பிடிப்பு தொடக்கம்!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


