டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

முதற்கட்ட வாக்குப்பதிவு: குடும்பத்துடன் சென்று வாக்களித்த தெலங்கானா, மகாராஷ்டிர முதல்வர்கள்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கை இன்று (வியாழக்கிழமை) செலுத்தினர். 

News image
Updated On :11 ஏப்ரல் 2019, 5:04 pm IST


தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கை இன்று (வியாழக்கிழமை) செலுத்தினர். 

17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.    

தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேச ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் தனது மனைவி விமலா நரசிம்மனுடன் செகந்தராபாத் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ராஜ்பவன் அருகே உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.   

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது மனைவி ஷோபா ராவ் ஆகியோர் மேடக் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சின்டமடக்கா கிராமத்தில் தங்களது வாக்கை செலுத்தினர். 

ஏஐஎம்ஐஎம் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான அசாதுதின் ஒவைசி சாஸ்திரிபுரத்தில் தனது வாக்கை செலுத்தினார். 

தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும் நல்கொண்டா மக்களவைத் தொகுதி வேட்பாளருமான உத்தம் குமார் ரெட்டி கோடாட் பகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்.  

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தனது மனைவி அம்ருதா மற்றும் தாயார் சரிதா ஃபட்னவீஸ் ஆகியோருடன் நாக்பூர் தொகுதிக்குட்பட்ட தரம்பேத் ஹிந்தி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.