தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்: சந்திரபாபு நாயுடு

சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

News image
Updated On :17 பிப்ரவரி 2019, 4:49 am

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி வியாழக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிரிழப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தருணத்தில் வீரர்களின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக நாங்கள் அனைவரும் இருப்போம். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் ஆந்திர அரசு வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.