சோனியாவுடன் சரத் பவார் சந்திப்பு: மகாராஷ்டிர தொகுதிப் பங்கீடு ஆலோசனை

மகாராஷ்டிரத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.


மகாராஷ்டிரத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இருவரும் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்தனர்.
289 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவையின் பதவிக் காலம் வரும் அக்டோபருடன் முடிவடைய உள்ளது. அதனால் அங்கு விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் அவரை சரத் பவார் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இதுதொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். விரிவான பேச்சுவார்த்தை வரும் நாள்களில் நடைபெறவுள்ளது. அதன் பின்னர், இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றன.
கடந்த சில வாரங்களாக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மாநில தலைவர்கள் பல முறை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com