காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மாநிலங்களுக்கு 11,092 பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் ஒப்புதல்

மாநிலங்களுக்கு ரூ.11,092 பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். 

News image
Updated On :3 ஏப்ரல் 2020, 2:50 pm

DIN

மாநிலங்களுக்கு ரூ.11,092 பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். 

கரோனா பாதித்த மாநிலங்களின் முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வழியாக வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக முதல்வா் பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாா். 

அப்போது தமிழகத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவா் பேசினாா்.கரோனா பாதிப்பை சமாளிக்க மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை முன்னதாகவே விடுவிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியிடம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினாா். 

இந்த நிலையில், மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.11,092 கோடி மாநில பேரிடர் மேலாண்மை நிதியாக தரப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.