ஈரான் எங்களிடம் ராணுவ உதவி கேட்கவில்லை! - ரஷிய அரசு அறிவிப்பு!
ஈரான் அரசு தங்களிடம் ராணுவ உதவிகளைக் கேட்கவில்லை என ரஷியா அறிவித்துள்ளது குறித்து...


ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவியையும் கேட்கவில்லை என ரஷிய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களில் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேலின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு நீண்டகால கூட்டாளியான ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கேட்கவில்லை என வியாழக்கிழமை (மார்ச் 5) ரஷிய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...