ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர்நிறுத்தம் கொண்டுவர மத்தியஸ்தம் செய்வதற்குத் தயார் என இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அறிவித்துள்ளார்.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து சனிக்கிழமை (பிப். 28) காலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமைந்துள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கு, மத்திய கிழக்கு நாடுகளும் பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளதால், இந்த மோதல் மிகப் பெரியளவிலான போராக உருவாகக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், இந்த மோதல்களைக் கைவிட்டு அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுக்காண வேண்டுமென இந்தோனேசிய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, இந்தோனேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“பாதுகாப்பு நிலையை மீட்டெடுப்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்த இந்தோனேசிய அரசு தயார்நிலையில் உள்ளது. இருதரப்பும் ஒப்புக்கொண்டால் மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தோனேசிய அதிபர் தெஹ்ரான் பயணம் செய்யத் தயாராக இருக்கிறார்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் நடைபெற்ற போரில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Indonesian President Prabowo Subianto has announced his readiness to mediate between Iran and the United States.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்கா தாக்குதல்! ஈரான் உடன் ரஷியா, சீனாவை இணைக்கும் ரயில் பாலம் தகர்ப்பு!

ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்

கமேனியின் இறுதிச் சடங்கிற்குப் பிறகே அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சு!

அமெரிக்கா - ஈரான் இடையே கத்தாரில் மறைமுகப் பேச்சுவார்த்தை!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK




