கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஈரான் - அமெரிக்கா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்! - இந்தோனேசியா அறிவிப்பு!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என இந்தோனேசியா அறிவிப்பு..

News image
அமெரிக்க அதிபர் டிரம்ப் - இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ - ஈரானின் தலைமை மதகுரு கமேனி- AP
Updated On :28 பிப்ரவரி 2026, 11:42 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர்நிறுத்தம் கொண்டுவர மத்தியஸ்தம் செய்வதற்குத் தயார் என இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அறிவித்துள்ளார்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து சனிக்கிழமை (பிப். 28) காலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதையடுத்து, மத்திய கிழக்கில் அமைந்துள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு, மத்திய கிழக்கு நாடுகளும் பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளதால், இந்த மோதல் மிகப் பெரியளவிலான போராக உருவாகக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், இந்த மோதல்களைக் கைவிட்டு அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுக்காண வேண்டுமென இந்தோனேசிய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, இந்தோனேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

“பாதுகாப்பு நிலையை மீட்டெடுப்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்த இந்தோனேசிய அரசு தயார்நிலையில் உள்ளது. இருதரப்பும் ஒப்புக்கொண்டால் மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தோனேசிய அதிபர் தெஹ்ரான் பயணம் செய்யத் தயாராக இருக்கிறார்” எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் நடைபெற்ற போரில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.