ஜம்மு காஷ்மீரில் கரோனா பாதிப்பு 75ஆக உயர்வு
ஜம்மு காஷ்மீரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது.


ஜம்மு காஷ்மீரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரேனாவுக்கு இந்தியாவில் இதுவரை 2301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 56 பேர் பலியாகினர். அதில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து காஷ்மீர் அரசின் செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் இன்று மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் இங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது. அதில் 4 பேர் காஷ்மீரிலும், ஒருவர் ஜம்முவிலும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...