சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்க்கண்டில் 72 வயது முதியவர் கரோனாவுக்கு முதல் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக

News image
Updated On :9 ஏப்ரல் 2020, 4:57 am

PTI

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். 

போகாரோ மாவட்டத்தில் 72 வயதான முதியவர் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்கையில், அவருக்கு கரோனா அறிகுறி இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. 

கரோனா சிறப்பு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாகத் தலைமை மருத்துவ அதிகாரி அசோக் குமார் பதக் தெரிவித்தார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், இது முதல் பலி ஆகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.