எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விசாகப்பட்டினத்தில் உறவினர்களின்றி நடைபெற்ற திருமணம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக விசாகபட்டினத்தில் உறவினர்கள் யாருமின்றி திருமணம் நடைபெற்றது.

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 10:57 am

DIN

ஊரடங்கு உத்தரவு காரணமாக விசாகப்பட்டினத்தில் உறவினர்கள் யாருமின்றி திருமணம் நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லவும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி எளிமையாக நடைபெற்று வருகிறது. 

ஆந்திர மாலிநலம், விசாகப்பட்டினத்தில் மகேஷ் மற்றும் சௌஜன்யாவின் திருமணம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயமானது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களது திருமணம் அனகபள்ளியின் என்.டி.ஆர் காலனியில் உள்ள மணமகனின் வீட்டில் வியாழக்கிழமை இரவு 11.20 மணிக்கு எளிமையான முறையில் நடைபெற்றது. 

இந்த திருமணத்தில் ஆறு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு பாதிரியார் கலந்து கொண்டனர். இதுகுறித்து மணமகனின் தந்தை கூறுகையில், எனது மகனின் திருமணம் நான்கு மாதங்களுக்கு முன்பே நிர்ணயிக்கப்பட்டது. நாங்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் திருமணத்தை நடத்தினோம். திருமணத்தின் போது ஆறு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு பாதிரியார் கலந்து கொண்டனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.