காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது

காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது

காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் காவல்துறையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை அவர்கள் கைது செய்தனர். 

கைதான நபர் முகமது முசாஃபர் வோத்போராவையைச் சேர்ந்தவர் என்பதும் ஜெய்ஷ்-ஏ-முகமது எனும் பயங்கரவாத அமைப்புக்கு அவர் உதவிகளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com