காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் காவல்துறையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை அவர்கள் கைது செய்தனர்.
கைதான நபர் முகமது முசாஃபர் வோத்போராவையைச் சேர்ந்தவர் என்பதும் ஜெய்ஷ்-ஏ-முகமது எனும் பயங்கரவாத அமைப்புக்கு அவர் உதவிகளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.