இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

ஜார்க்கண்டில் மேலும் 2 பேருக்கு கரோனா உறுதி

ஜார்க்கண்டின் போகரோ மாவட்டத்தில் மேலும் 2 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்குப்..

News image
Updated On :13 ஏப்ரல் 2020, 5:23 am

PTI

ஜார்க்கண்டின் போகரோ மாவட்டத்தில் மேலும் 2 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து துணை ஆணையர் முகேஷ்குமார் கூறியதாவது...

ஜார்க்கண்டில், 68 வயது முதியவர் மற்றும் 45 வயதுடைய இருவருக்கு கரோனா நோய்த் தொற்று நேற்றிரவு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

ஏப்ரல் 8-ம் தேதி 72 வயது முதியவர் பலியாகியுள்ளார். இந்நிலையில் இரண்டு பேர் கரோனாவுக்கு புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போகாரோவில் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உள்ளது. 

கடந்த மார்ச் 31-ம் தேதி முதன் முதலாக மலேசியப் பெண்ணுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர் ராஞ்சியில் உள்ள ஹிந்த்பிரி வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.