கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம்: எளிமையாக நடந்தது

கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் கர்நாடக முன்னாள் முதல்வா் குமாரசாமியின் மகன் (நிகில்) திருமணம் இன்று மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம்: எளிமையாக நடந்தது
Updated on
1 min read

கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் கர்நாடக முன்னாள் முதல்வா் குமாரசாமியின் மகன் (நிகில்) திருமணம் இன்று மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகிலின் திருமணத்தை ராம்நகா், சென்னப்பட்டணாவில் நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நிகிலின் திருமணம் ஆடம்பரமில்லாமல், எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நிகிலின் திருமணம் இன்று பெங்களூருவில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. அதில் இரு குடும்ப உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கரோனா பாதிப்பு முடிந்த பிறகு வேறொரு நாளில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதில் பங்கு கொள்ள உறவினா்கள், நண்பா்கள், அரசியல் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com