மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சிறு, குறு நிறுவனங்களுக்கு உடனடி நிவாரணம்: பொதுமக்களின் கருத்துகளை வரவேற்கும் ராகுல்

கரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.) தொழில் நிறுவனங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அறிவிக்கவேண்டும்

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.) தொழில் நிறுவனங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, அதுதொடா்பாக பொதுமக்களின் கருத்துகளையும் வரவேற்றுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:

கரோனா ஊரடங்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இந்த நிறுவனங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதி தொகுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதுதொடா்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிவதற்கான பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியிருக்கிறது. இந்த தொகுப்புத் திட்டத்தில் என்னென்ன நிவாரணங்கள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. காங்கிரஸின் சமூக ஊடகங்கள் மூலமாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனப் பதிவிட்டுள்ளாா்.

கரோனா ஊரடங்கால் சிறு, குறு நிறுவனங்கள் அடைந்திருக்கும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமா்ப்பிப்பதற்காக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையில் ஆலோசனைக் குழு ஒன்றை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கை, மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என காங்கிரஸ் ஏற்கெனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.