யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தில்லி உயிரியல் பூங்காவில் புலி மரணம்

தில்லி உயிரியல் பூங்காவில் 14 வயதுடைய பெண் புலி ஒன்று இறந்தது. 

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 4:24 pm

DIN

தில்லி உயிரியல் பூங்காவில் 14 வயதுடைய பெண் புலி ஒன்று இறந்தது. 

தில்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் கல்பானா என்கிற பெண் புலி ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. 14 வயதுடைய அந்த புலி சிறுநீரக கோளாறு காரணமாக சில காலம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் புலி நேற்று இறந்தது. 

இதையடுத்து புலியின் மாதிரிகளை எடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். கரோனா பரவல் இருந்ததா என்பது குறித்த ஆய்வு செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் கடந்த 5ஆம் தேதி 4 வயதான நாடியா என்ற பெண் புலிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அந்த புலியிடம் இருந்து மேலும் 4 புலிகளுக்கும், மூன்று ஆப்ரிக்க நாட்டு சிங்கங்களுக்கும் கரோனா பரவியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.