

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,915 ஆக உள்ளது.
கடந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக 597 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில், புணேவில் மட்டும் கடந்த 12 மணி நேரத்தில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புணேவில் பாதிப்பு 1,722 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதில் 1,593 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 33,050 ஆகவும் உயிரிழப்பு 1,074 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.