டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கர்நாடகத்தின் கலாபுராகியில் 144 தடை உத்தரவு: அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை எதிரொலி

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு நடத்தப்படும் பூமி பூஜையை அடுத்து, கர்நாடகாவின் கலாபுராகி நகரில் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
கர்நாடகத்தில் 144 தடை உத்தரவு
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு நடத்தப்படும் பூமி பூஜையை அடுத்து, கர்நாடகாவின் கலாபுராகி நகரில் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் புதன்கிழமை ராமர் கோவிலுக்கு அடிக்கல்நாட்டு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தின் நடுவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த  நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்படுகிறார். லக்னோவை அடைந்த பிறகு, அங்கிருந்து 125 கி.மீ தூரத்தில் உள்ள அயோத்தியாவுக்கு செல்கிறார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியையொட்டி நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கர்நாடகத்தின் கலாபுராகியில் ஆகஸ்ட் 4 முதல் 6ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

144 தடைஉத்தரவு  ஆகஸ்ட் 4, மாலை 3 மணி முதல் ஆகஸ்ட் 6 காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று கலாபுராகி நகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.