டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமரின் அருளாசியால் கரோனா ஒழிந்துவிடும்: சிவ சேனை

ராமரின் அருளாசியால் நாட்டில் தற்போது நிலவும் கரோனா தொடர்பான பேரிடர் முற்றிலும் ஒழிந்து விடும் என்று சிவ சேனை தெரிவித்துள்ளது.

News image
ராமரின் அருளாசியால் கரோனா ஒழிந்துவிடும்: சிவ சேனை
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN


மும்பை: ராமரின் அருளாசியால் நாட்டில் தற்போது நிலவும் கரோனா தொடர்பான பேரிடர் முற்றிலும் ஒழிந்து விடும் என்று சிவ சேனை தெரிவித்துள்ளது.

சிவ சேனையின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் தலையங்கத்தில் அயோத்தியில் நாளை நடைபெறும் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறுகிறது.

அயோத்தியாவில் ராமர் கோயில் பூமி பூஜைக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவதைப் போன்ற ஒரு பொன்னான நேரம் வேறு இருக்காது. தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வருகிறது. ஆனால், ராமரின் அருளாசியால் அது ஒழிந்து போய்விடும் என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற முக்கியப் பணியாற்றிய எல்.கே. அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் புது தில்லியில் இருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் காண்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியாவில் நாளை நடைபெறும் பூமி பூஜையைக் காண நாட்டு மக்கள் அனைவருமே ஆவலோடு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.