டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது: பிரியங்கா காந்தி

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, கலாசாரம், சகோதரத்துவம் கொண்டது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

News image
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாசார ரீதியானது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 'நாளை அயோத்தியில் நடைபெறவிருக்கும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை வாய்ந்தது. சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியானது.

எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவையே கடவுள் ராமரின் சாராம்சமாகும். ராமர் மற்றும் அன்னை சீதையின் அருளால் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. கடவுள் ராமர் அனைவரிடத்திலும் இருக்கிறார்' என்று பதிவிட்டுள்ளார். 

பிரியங்கா காந்தியின் இந்த ட்விட்டர் பதிவு கட்சியின் நிலைப்பாட்டையே மாற்றியதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 100 முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இவ்விழாவுக்கு காங்கிரசுக்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.