சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்கண்டில் விஷவாயு தாக்கியதில் 6 பேர் பலி

ஜார்கண்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 6 பேர் பலியானார்கள். 

News image
கோப்புப் படம்
Updated On :9 ஆகஸ்ட் 2020, 2:03 pm

DIN

ஜார்கண்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 6 பேர் பலியானார்கள். 

ஜார்கண்ட் மாநிலம், தியோகர் மாவட்டத்தில் வீடு ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய 2 தொழிலாளர்கள் அதனுள் இறங்கினர். நீண்ட நேரமாகியும் இருவரும் திரும்பவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளரின் 2 மகன்கள் என அடுத்தடுத்து 4 பேர் இறங்கியிருக்கிறார்கள். 

ஆனால் அவர்களும் மேலே வரவில்லை. 6 பேரும் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பிறகு அக்கிராமத்தினர் கழிவுநீர் தொட்டியை உடைத்து 6 பேரை மீட்டு தியோகர் சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 21ஆம் தேதி கர்வா மாவட்டத்தில் இதேபால் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 3 பேர் விஷவாயு தாக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.