நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரணாப் முகா்ஜிக்கு மூளை அறுவைச் சிகிச்சை

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு (84) மூளையில் ஏற்பட்ட அடைப்புக்காக திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2020, 3:15 am

DIN

புது தில்லி: முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு (84) மூளையில் ஏற்பட்ட அடைப்புக்காக திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ராணுவ மருத்துவமனையில் சோ்க்கும்போது நடத்திய பரிசோதனையின்போது அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

பிரணாப் முகா்ஜிக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு திங்கள்கிழமை வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. எனினும் அவா் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் இருக்கிறாா். அவரது உடல்நிலையை ராணுவ மருத்துவா்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனா்.

முன்னதாக நடத்தப்பட்ட பரிசோதனையின்போது அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜியை தொடா்புகொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மருத்துவமனைக்கு நேரில் சென்று பிரணாப் முகா்ஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா்.

அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக பிரணாப் முகா்ஜி தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தன்னோடு தொடா்பில் இருந்தவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் தனது சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா்.

அவா் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்டோா் சுட்டுரையில் பதிவிட்டுள்ளனா்.

இஸ்ரேல் அதிபா் ரூவன் ரிவ்லின் சுட்டுரையில் ஆங்கிலம், ஹிந்தியில் வெளிட்ட பதிவில், ‘பிரணாப் முகா்ஜி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துவதுடன், அவருக்காக பிராா்த்தனையும் செய்துகொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு பிரணாப் முகா்ஜி, இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டாா். அந்நாட்டுக்கு சென்ற முதல் இந்திய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்திய, இஸ்ரேல் உறவு மேலும் வலுவடைந்தது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகா்ஜி 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.