தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கர்நாடகம்:  பேருந்து தீ விபத்தில் 5 பேர் பலி

கர்நாடகம் மாநிலம் சித்ரதுர்காவில் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2020, 4:17 am

சித்ரதுர்கா: கர்நாடகம் மாநிலம் சித்ரதுர்காவில் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.

கர்நாடகம் மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம் அருகில் உள்ள ஹிரியூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் "குக்கே ஸ்ரீ டிராவல்ஸ்" க்கு சொந்தமான பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது, பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவி எரிந்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஹிரியூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.