சிம்லா: ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் வாகனங்கள் மீது பாறை சரிந்து விழுந்த விபத்தில் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஹாங்கோய் கோயில் அருகே உள்ள சண்டிகர் - மணலி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வழக்கம்போல் சென்றுகொண்டிருந்தன. கடந்த சில தினங்களாக ஹிமாசலில் தொடர் மழை பெய்து வருவதால், மண் ஈரப்பதம் காரணமாக மேடான பகுதியில் இருந்த பாறை சரிந்து சாலையில் விழுந்தது. இதில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்து வாகனத்தில் இருந்த ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசியதாவது, மழை ஈரப்பதம் காரணமாக அதிகாலை 5 மணியளவில் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. அதில் இரண்டு வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன. வாகனத்தில் இருந்த 2 ஓட்டுநர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் பாறை சரிவின் காரணமாக 4 முறை விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

